மானிப்பாயை பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மகேஸ்வரி திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் 02-07-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலம்சென்ற செல்லையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்ற பொன்னம்பலம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும் இளைப்பாறிய ஆசிரியர் பொன்னம்பலம் திருஞானசம்பந்தப்பிள்ளையின் அன்பு மனைவியும் Dr.வாகீசன் (கனடா), வாசுகியின் (முன்னாள் கல்வித்திணைக்களம் - கொழும்பு) அன்பு தாயாரும் Dr. சிவராஜி, நடேசன்,சிறீகரன் (Business Development Advisor - HNB) இன் அன்பு மாமியும் வாசினி, பிரணவன், கர்த்திகன், கரீந்திரன் ஆகியோரின் அன்பு பேத்தியும் திருமதி புவனேஸ்வரி பத்மநாதனின் சகோதரியும் ஆவர். அன்னாரின் பூதவுடல் 06-07-2022 புதன்கிழமை காலை 9:00 AM மணிக்கு Borella ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 3:00 PM இறுதி கிரிகைகள் ஆரம்பித்து 04:30 PM மணிக்கு கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குடும்பத்தினர்.