கடந்த 08-04-2020 புதன்கிழமை அன்று சிவபதமடைந்த எங்கள் குடும்ப தலைவி திருமதி சிவகுமாரி தர்மஜெகநாதன் அவர்களின் ஆத்மசாந்தி 21-05-2020 நாளை வியாழக்கிழமை 10:00 AM மணியளவில் அன்னாரின் இலலத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
அன்னாரின் இழப்பின்போது சொல்வதறியாது நிலை குலைந்து நின்ற எமக்கு நாட்டின் அசாதாரண சூழ்நிலையையும் கருத்தில்கொள்ளாது நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும் இறுதிக்கிரியையில் பங்குபற்றிய நண்பர்கள், உறவினர்களுக்கும் தொலைபேசிமூலம் அழைத்தும் எமது இழப்பை தமது இழப்பாகவும் கருதி முகநூல் மூலம் பிரசுரித்து எல்லோரின் அனுதாபங்களையும் எமக்களித்து உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இருகரம் கூப்பி கண்ணீர்மல்க எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாட்கள் 45 சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் !
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
Home
+94212255889
மகன்
0776441604
மகள்
+94766597640